மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உறுதி
x
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தலைவர்கள் அடிக்கடி அங்கு சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தற்போது மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பர்தாமன் மாவட்டத்தில் ஜெகதாநந்தாப்பூருக்கு சென்ற ஜே.பி. நட்டா அங்குள்ள ஒரு விவசாயியின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜே.பி. நட்டா ,  மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று  ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்