பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி வீடு திரும்பினார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி வீடு திரும்பபினார்.
x
இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் கூறுகையில் தான் முழு உடல் சுகத்துடன் இருப்பதாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அதுவரை கங்குலி தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்