காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிலரங்கம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் காணொலி மூலம் துவக்கினார்

கடவுள் சிலைகளை உடைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிலரங்கம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் காணொலி மூலம் துவக்கினார்
x
ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பிறகு போலீசாருக்கான முதல் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் திருப்பதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிலரங்கை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுவரும் தொழில்நுட்பத்தின் காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்களுடன் சைபர் குற்றங்கள், சமூக வலைதளம் மூலமாக தவறுகள், ஒயிட் கலர் தவறுகள் அதிகரித்துக் கொண்டே வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்