வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்
x
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், மீண்டும் இன்று காலை டெல்லி நோக்கி, வந்து புராரி மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். இன்று காலை விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் இருந்தும் விவசாயிகள் மைதானம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, டெல்லி-அரியானா எல்லை அமைந்துள்ள சிங்கு என்னும் இடத்திலும், ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்