எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி - பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள் அழிப்பு

எல்லையில் அத்து மீறிய பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள் மற்றும் வெடி மருந்து கிடங்களையும் சரமாரியான தாக்குதலால் இந்திய ராணுவம் அழித்தது.
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி - பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள் அழிப்பு
x
இந்தியாவை நேரடியாக எதிர்க்கொள்ள முடியாத பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மூலம் மறைமுகமாக போரை தொடுத்து வருகிறது. இவ்வாறு காஷ்மீர் பகுதிக்குள் வரும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேட்டையாடி வருகிறது.
 
அதிகாலை நேரங்களில் பயங்கரவாதிகளை அனுப்பும் சதிதிட்டத்தை இந்திய ராணுவம் முறியடித்ததால், ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம் மக்கள் இருக்கும் பகுதிகளை நோக்கி தாக்குதலை நடத்தியது. இதில் 4 ராணுவ வீரர்கள், ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மற்றும் பொதுமக்களில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். 

பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் மூலம் பதில் கொடுத்துள்ளது. உரி, கெரான், பூஞ்ச், பாரமுல்லா செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை குறிவைத்து டாங்கிகள் மூலம் அதிரடியான தாக்குதலை நடத்தி அவைகளை அழித்தது.

இந்தியாவின் அதிரடி தாக்குதலில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடியால் எல்லையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் இச்சூழலில் பாகிஸ்தானின் அடாவடியான செயல் எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது. இந்திய ராணுவம் எல்லையில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்