கர்நாடகாவில் இளம்பெண் எரித்து கொலை - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா?

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இளம்பெண் எரித்து கொலை - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா?
x
மைசூர் மாவட்டத்தின் பிரியா பட்னா பகுதியிலிருந்து ராவந்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் வயது 16 முதல் 18 வயது வரை இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பெண்ணின் முகத்தில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். அந்த பெண் உயிருடன் எரிக்கப்பட்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்