இத்தாலி பிரதமருடன், பிரதமர் மோடி பேச்சு - காணொலி மூலம் நடைபெற்ற நல்லுறவு சந்திப்பு

கொரோனாவுக்கு பிந்தைய உலகிற்காக எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமருடன், பிரதமர் மோடி பேச்சு - காணொலி மூலம் நடைபெற்ற நல்லுறவு சந்திப்பு
x
இந்தியா மற்றும் இத்தாலி பிரதமர் இடையேயான கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இரு நாட்டு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் கிச்சிப்பி காண்டேவும் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். அதில், உரையாற்றிய பிரதமர் மோடி, இதுபோன்ற கூட்டங்கள் மூலம் இருநாடுகளின் உறவு  மேலும் வலுவடையும் என்றார். ஒன்றுபட்டு பணியாற்ற, நல்ல புரிதலை ஏற்படுத்தும் என்ற பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிந்தைய உலகுக்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார். புதிய வாய்ப்பு மற்றும் சவால்களை சமாளிக்க ஏதுவாக புத்துணர்ச்சியுடன் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்