சபரிமலை கோவிலில் மண்டல, மகரவிளக்கு தரிசனம் - டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன் பதிவு, தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக, முந்தைய நாளான 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்படுகிறது. மேலும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்குமான முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Next Story