அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 மற்றும் 3-வது கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
x
அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 மற்றும் 3-வது கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2 ஆம் கட்டம், 3 ஆம் கட்டமாக நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு, செயல்திறன் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2021 முதல், மார்ச் 2031-க்குள் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்