பீகார் தேர்தல் களம்: "நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார்" தேர்தல் பிரசாரத்தில் சிராக் பாஸ்வான் ஆவேசம்

பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் களம்: நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் தேர்தல் பிரசாரத்தில் சிராக் பாஸ்வான் ஆவேசம்
x
அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான மகாகத் பந்தனுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தும்ரவானில் பிரச்சாரம் மேற்கொண்ட, லோக் ஜனசக்தி கட்சி தலைவர்  சிராக் பாஸ்வான், பீகாரில் மதுபானத் தடை தோல்வியடைந்து விட்டதாகவும், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் கூறினார். மேலும், பீகார் முதன்மை மாநிலமாக வர வேண்டுமெனில் லோக் ஜனசக்தி வேட்பாளருக்கு வாக்களியுங்கள், லோக்ஜனசக்தி வேட்பாளர் நிற்காத இடத்தில் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நிதிஷ் இல்லாத அரசை உருவாக்க விரும்புவதாகவும், லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால், நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் எனவும் சிராக் பாஸ்வான் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்