இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 3 தீவிரவாதி - ஏ.கே.47 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

இந்தியாவிற்குள் ஊடுருவ 300 தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக ராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 3 தீவிரவாதி - ஏ.கே.47 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
x
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக ராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காஷ்மீரின், கெரான் செக்டர் வழியாக இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் நுழைந்து ஆயுதம் கடத்த முயன்றனர். இவர்கள், பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியிலிருந்து, இந்தியாவிற்கு ஆயுத கடத்தி வருவதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற இந்திய ராணுவம், 4 ஏ.கே. 47 துப்பாக்கிகள், 240 புல்லட்களை பறிமுதல் செய்தனர். ஆனால் கடத்தி வந்த, 3 பேரும் தப்பியோடியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக, இந்திய எல்லைப்பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்