அனுராக் காஷ்யப் மீது புகார் அளிக்க டெல்லி சென்ற பாயல் கோஷ் - காவல் நிலையத்தை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார்

பிரபல இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்துள்ள நடிகை பாயல் கோஷ், தேசிய மகளிர் ஆணையத் தலைவரை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.
அனுராக் காஷ்யப் மீது புகார் அளிக்க டெல்லி சென்ற பாயல் கோஷ் - காவல் நிலையத்தை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார்
x
பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தி பட நடிகை பாயல் கோஷ் இவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்புபை ஏற்படுத்தி உள்ளார். அனுராக் காஷ்யப் வீட்டுக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், மேலும் அவர் 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து இருப்பதாக பெருமையாக கூறியதாகவும் பாயல் கோஷ் புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இயக்குனர் அனுராக் காஷ்யப் திட்டவட்டமாக மறுத்ததுடன், இது ஆதாரமற்ற புகார் என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பாயல் கோஷ்,  மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்திற்கு நேரில் தனது வழக்கறிஞருடன் சென்று காஷ்யப் மீது புகார் அளித்தார். இதில் 2013-ம் ஆண்டில் வெர்சோவாவின் யாரி சாலையில் உள்ள ஒரு இடத்தில் காஷ்யப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அனுராக் காஷ்யப் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376 (1)(கற்பழிப்பு) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில், அவர் தேசிய மகளிர் ஆணைய தலைவரை நேரில் சந்தித்து, தமக்கு நேர்ந்த நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்