விமானப்படையில் முறைப்படி இணைந்த 5 ரபேல் போர் விமானங்கள் - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஃபிரான்ஸ் அமைச்சர் பார்லி பங்கேற்பு

ஃபிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டது.
விமானப்படையில் முறைப்படி இணைந்த 5 ரபேல் போர் விமானங்கள் - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஃபிரான்ஸ் அமைச்சர் பார்லி பங்கேற்பு
x
அரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் 5 விமானங்களும் இணைக்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விமானப்படையில் இணைந்த 5 ரஃபேல் போர் விமானங்கள் - விண்ணில் சாகசம் செய்த ரஃபேல் விமானங்கள்...

இதனை தொடர்ந்து ஃபிரான்சில் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம், விண்ணில் பறக்க விடப்பட்டு சாகசம் செய்து காட்டப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஃபிரான்ஸ் அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்