விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பு
x
கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெங்களூரு நகரில் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பெங்களூரு நகரில் கே ஆர் புரம், எச் எஸ் ஆர் லேஅவுட், சிவாஜி நகர், கொத்தனூர், கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்ததால் பலரது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளன


Next Story

மேலும் செய்திகள்