குழந்தைகளை வைத்து உடலில் படம் வரைந்த விவகாரம் - ரெஹனா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளாவில் குழந்தைகளை வைத்து உடலில் படம் வரைந்த ரெஹனா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
குழந்தைகளை வைத்து உடலில் படம் வரைந்த விவகாரம் - ரெஹனா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
x
சபரிமலை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா, தன் குழந்தைகளை வைத்து தனது உடலில் படம் வரைந்து, அந்த வீடியோ காட்சியை சமூக ஊடங்களில் வெளியிட்டார்.இது குறித்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரெஹனா முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அங்கு மனு தள்ளுபடியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். உச்சநீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் ரெஹனா பாத்திமா சரணடைந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்