பெண்ணிடம் செல்போன் பறிப்பு : எதிரே வந்த வாகனத்தில் மோதியதால் சிக்கிய திருடர்கள்
புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செல்போன் பறிக்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செல்போன் பறிக்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி, காராமணிகுப்பம் பகுதியை சேர்ந்த பிரியாவிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் செல்போனை பறித்துகொண்டு பறந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த வாகனம் மீது மோதி அவர்கள் கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மக்களிடம் சிக்கியுள்ளனர்.
Next Story