தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டணத்தை நிர்ணயித்து கர்நாடக அரசு உத்தரவு

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டணங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டணத்தை நிர்ணயித்து கர்நாடக அரசு உத்தரவு
x
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டணங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு  சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் அரசு சலுகை பெறும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், அரசு புதிதாக அறிவித்துள்ள சிகிச்சை கட்டணங்கள் மட்டுமே தனி நபர்களிடம் வாங்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அரசு சலுகை பெறுபவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் நேரடியாக, அரசு தனியார் மருத்துவமனைக்கு கட்டணத்தை செலுத்தி விடும் என்றும், தனி நபர்களை பொறுத்தமட்டில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக சாதாரண வார்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும், வெண்டிலேட்டரை உள்ளடக்கிய  தனி வார்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்