வரும் 8-ஆம் தேதி ஏழுமலையான் கோவில் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் இரண்டரை மாதங்களுக்கு பிறகு வரும் எட்டாம் தேதி திறக்க உள்ள நிலையில் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கோவிலுக்குள் சென்று திருப்பதி மாநகர எஸ்பி ரமேஷ் ரெட்டி பார்வையிட்டார்.
வரும் 8-ஆம் தேதி ஏழுமலையான் கோவில் திறப்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் இரண்டரை மாதங்களுக்கு பிறகு வரும் எட்டாம் தேதி திறக்க உள்ள நிலையில் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கோவிலுக்குள் சென்று திருப்பதி மாநகர எஸ்பி ரமேஷ் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து வரவேண்டும்,  6 அடி இடைவெளி விட்டு வரவேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். பக்தர்களை சமூக இடைவெளியுடன் கையாள்வதற்காக  திருமலையில் பணியாற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பதி கோவிலுக்கு வரும், பக்தர்களை தள்ளி விடுவது இழுத்து விடுவது போன்ற எந்த வித தொந்தரவும் பக்தர்களுக்கு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்