அரிசி,காய்கறிகள் காங்கிரஸார் விநியோகம் - ஊரடங்கு உத்தரவை மீறியதால் வழக்குபதிவு

புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அரிசி,காய்கறிகள் காங்கிரஸார் விநியோகம் - ஊரடங்கு உத்தரவை மீறியதால் வழக்குபதிவு
x
புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரவை மீறி கூட்டம் கூடும் வகையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் உட்பட உறுப்பினர்கள் பலர் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை விநியோகம் செய்தனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட ஏராளமானோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு சட்டம் என இரண்டு பிரிவின் கீழ் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்