ஆன்மீக சுற்றுலா சென்ற 38 பேர் : நேபாளத்தில் தவிக்கும் சென்னைவாசிகள்
சென்னையிலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 38 பேர் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் அவர்களை மீட்டுக் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையிலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 38 பேர் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் அவர்களை மீட்டுக் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொருக்குப்பேட்டையில் இருந்து 38 பேர் அலகாபாத், காசி, நேபாளம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். தற்போது அவர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிப்பதால் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உறவினர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.
Next Story