கொரோனா வைரஸ் : "தினசரி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்" - ராகுல்காந்தி
கொரோனா வைரஸ் நமது பொருளாதாரத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நமது பொருளாதாரத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், சிறு, நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பண உதவி, வரிவிலக்கு மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற ஒரு பெரிய பொருளாதார நிதி திட்டம் தேவை என கூறியுள்ளார். எனவே, கைதட்டல் மட்டும் அவர்களுக்கு உதவாது என்றும், விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Next Story