ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை கொலை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தாய் கொடூர செயல்

கேரளாவில் ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை கொலை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தாய் கொடூர செயல்
x
கேரளாவில் ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், தாயே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. பால்மனம் மாறாத இந்த பச்சிளம் சிசுவை கொலை செய்து விட்டு நாடகமாடி, தாயை, போலீஸ் கைது செய்திருக்கிறது. பெற்ற குழந்தையை தாயே கொலை செய்ய என்ன காரணம்...?. கேரளாவில் கண்ணூர் தையில் கிராமத்தைச்சேர்ந்த பிரணவ் - சரண்யா தம்பதியின் ஒன்றரை வயது மகன் வியான்னை காணவில்லை என  கண்ணூர் நகர காவல்நிலையத்தில்  தந்தை புகார் அளித்தார். இந்த நிலையில், அங்குள்ள கடற்கரையில், குழந்தை வியான் சடலமாக மீட்கப்பட்டான். இதை தொடர்ந்து குழந்தையை, போலீசார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது,  தலையில் பலத்த காயம் இருப்பதாகவும், குழந்தை கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர்




Next Story

மேலும் செய்திகள்