அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவது தொடர்பான வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவது தொடர்பான வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
x
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி கார்த்திகேயேன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அமைச்சரவை தீர்மானத்தை மீறி துணை நிலை ஆளுநர் செயல்ப்படுவதாக முதல்வர் தரப்பில் வாதிட்டப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர முதல்வருக்கு உரிமையில்லை என ஆளுநர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்