குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள்:"48 மணி நேரத்தில் கட்சி இணையதளங்களில் வெளியிட வேண்டும்" - உச்சநீதிமன்றம்

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்துக்குள் கட்சியின் இணைய தளம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள்:48 மணி நேரத்தில் கட்சி இணையதளங்களில் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம்
x
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்துக்குள் கட்சியின் இணைய தளம் மற்றும்  சமூக வலைதளங்களில் வெளியிடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க.வை சேர்ந்த  அஸ்வினி குமார் உபத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெற்றி வாய்ப்பை தாண்டி, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட காரணங்களையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் 72 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், குற்றப் பின்னணியை அளிக்க தவறும் கட்சிகள் தொடர்பாக தகவல் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்