சொத்து தகராறில் மகனை கொலை செய்த தந்தை - குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரண்

புதுச்சேரியில் சொத்து தகராறு காரணமாக மகனை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறில் மகனை கொலை செய்த தந்தை - குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரண்
x
புதுச்சேரி  வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகன் ரஞ்சித் , பிரெஞ்ச் குடியுரிமை பெற்று , மனைவியுடன் அங்கேயே வசித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுமுறைக்காக புதுச்சேரி வந்த ரஞ்சித் , தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வீட்டிற்கு குடித்து விட்டு வந்த ரஞ்சித் , தாயை தலையனையால் அமுக்கி தந்தை குமாரை மிரட்டியுள்ளார். ஆத்திரத்தில் குமார், பூச்சி மருந்தை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் வீசியுள்ளார். மயக்கமடைந்த ரஞ்சித்தை , குமார் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் காவல்நிலையத்துக்கு சென்று செய்த குற்றத்தை ஓப்புக்கொண்டு குமார் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் , ரஞ்சித் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்