என்.ஐ.ஏ சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.ஐ.ஏ சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
x
மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டம் செல்லாது என உத்தரவிடக் கோரி உமர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதிகள் நரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கையை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இதனிடையே, தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்பான வழக்கு விசாரணைகளில் இருந்து விலகுவதாக நீதிபதி நரிமன் அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்