கர்நாடகா : தீவிரவாதிகளுக்கு உதவியதாக ஒருவர் கைது
தீவிரவாதிகளுக்கு உதவியதாக ஏஜாஸ் பாஷா என்பவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் ஏற்கனவே பெங்களூருவைச் சேர்ந்த முகமது ஹனீப் கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய 3 பேரை தீவிரவாதி காஜா மைதீனுக்கு உதவி செய்ததாக கடந்த வாரத்தில் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். கலச பாளையம் என்ற பகுதியில் கார் ஓட்டுனர் என்ற போர்வையில் தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story