நிர்பயா குற்றவாளிகள்- தூக்கிலிடும் ஏற்பாடுகள் தீவிரம்

நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் செய்து வருகிறது.
நிர்பயா குற்றவாளிகள்- தூக்கிலிடும்  ஏற்பாடுகள் தீவிரம்
x
நிர்பயா வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் வினய் சர்மா, முகேஷ் ஆகிய 2 பேரின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை   உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது. அதேநேரம் தூக்கிலிடும் முன் குற்றவாளிகளை அவர்களது குடும்பத்தினரை சந்திக்க வைக்கும் ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்துவருகிறது. ஜனவரி 20ஆம் தேதி இந்த சந்திப்புக்கான ஏற்பாடு நடைபெறும் எனவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, முகேஷ் சிங் , வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்கூர் ஆகிய நான்கு குற்றவாளிகளின் உருவ பொம்மைகளை வைத்து, தூக்கிலிடுவது போன்ற ஒத்திகை நிகழ்வு சிறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்