"குடியுரிமை திருத்த சட்டம் : டெல்லி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு"

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில், இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டம் : டெல்லி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
வரலாற்று சிறப்பு மிக்க ஜாமா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக குவிந்த இஸ்லாமியர்கள், திடீரென வீதிக்கு வந்து, ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த பீம் சேனா அமைப்பினரும், இந்த பேரணியில் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அணி திரண்டதால், தலைநகரம் குலுங்கியது. இந்த மாபெரும் பேரணியில் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.  ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்