டெல்லி குடியிருப்பில் தீ விபத்து - 43 பேர் பலி

டெல்லியில் அட்டை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி குடியிருப்பில் தீ விபத்து - 43 பேர் பலி
x
டெல்லி அன​ஜ் மண்டி பகுதியில் உள்ள அட்டை தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 5 மாடி கட்டடத்தில் கரும்புகை பரவியதால் இடுக்குகளில் பலர் சிக்கினர். மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வெளியேற வழி தெரியாமல் பலர் உள்ளேயே சிக்கியுள்ளனர். தீ விபத்து குறித்த தகவலின் பேரில், சுமார் 30 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து மீட்பு பணியை வேகப்படுத்தினர். இதில், 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 22 பேர் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சென்றனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்

 

Next Story

மேலும் செய்திகள்