சொந்தமாக டீக்கடை நடத்தி வரும் நீச்சல் வீரர் : வேலைக்கு விண்ணப்பித்த போது லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு

பீகாரை சேர்ந்த கோபால் பிரசாத் என்பவர், தேசிய அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
சொந்தமாக டீக்கடை நடத்தி வரும் நீச்சல் வீரர் : வேலைக்கு விண்ணப்பித்த போது லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு
x
பீகாரை சேர்ந்த கோபால் பிரசாத் என்பவர், தேசிய அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், பாட்னாவில் உள்ள காசிப்பூரில் "நேஷனல் ஸ்விம்மர் டீ ஸ்டால்" என்ற பெயரில்  டீக்கடை ஒன்றை இவர் நடத்தி வருகிறார். பல இடங்களில் வேலைக்காக விண்ணப்பித்த போது, லஞ்சம் காரணமாக தனக்கு வேலை கிடைக்கவில்லை என ஆதங்கப்படும் அவர், தேசிய அளவில் நீச்சல் வீரராக உள்ள ஒருவரின் நிலை என்ன என்பதை உணர்த்தும் விதமாக நேஷனல் ஸ்விம்மர் என்ற பெயரில் டீக்கடையை நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது நிலையை பார்த்த தனது இருமகன்களும், நீச்சல் வீரர் ஆக வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்