டெல்லியில் தீவிர வாகன கட்டுப்பாடு அமல்

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு முறை இன்று அமலுக்கு வந்தது.
டெல்லியில் தீவிர வாகன கட்டுப்பாடு அமல்
x
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு முறை இன்று அமலுக்கு வந்தது. ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் என்ற அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடு நவம்பர் 15 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள், ஆம்புலன்ஸ், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டெல்லி முதல்வரின் வாகனத்திற்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்