ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - இலவச தரிசனத்திற்காக 4 கி.மீ தூரம் காத்திருப்பு

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - இலவச தரிசனத்திற்காக 4 கி.மீ  தூரம் காத்திருப்பு
x
திருமலையில்  திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. இலவச தரிசனத்திற்காக இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில்  பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள்  சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், காபி, பால், மோர் ஆகியவை தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் அங்கு தங்கும் அறைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்