புனே : கனமழைக்கு 17 பேர் பலி
மராட்டியத்தில் பெய்த கனமழையால், புனேவில் மழை வெள்ளம் மற்றும் விபத்து சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மராட்டியத்தில் பெய்த கனமழையால், புனேவில் மழை வெள்ளம் மற்றும் விபத்து சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால், பல இடங்களில் 7 அடிக்கும் உயரத்திற்கும் மேலாக அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உள்பட மொத்தம் 16 ஆயிரம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story