ஹோமியம் மருத்துவ பொருளாக அறிவிக்க வாய்ப்பு - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்

ஹோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.
ஹோமியம் மருத்துவ பொருளாக அறிவிக்க வாய்ப்பு - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்
x
ஹோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். கோவை தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா சித்தா உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். சேலம், மதுரை, தஞ்சை  மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை  அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாவும் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் குறிப்பபிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்