பிச்சை எடுத்தவர் பையில் ரூ.1.83 லட்சம் : பணத்தை சக சாதுக்களுக்கு வழங்கிட உடன் பிச்சை எடுக்கும் சாதுக்கள் கோரிக்கை
ஆந்திராவில் உயிரிழந்த பிச்சை காரர் பையில் இருந்து 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உயிரிழந்த பிச்சை காரர் பையில் இருந்து 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள மார்க்கண்டேஸ்வரர் கோவிலில் கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த காஞ்சி நாகேஸ்வரர் என்ற சாது, உடல் நல குறைவால் திடீரென உயிரிழந்தார். அவரது பையை சோதனையிட்டபோது, அதில் 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை மீட்ட போலீசார், காஞ்சி நாகேஸ்வரரின் இறுதி அஞ்சலிக்கு 3 ஆயிரம் ரூபாயை செலவு செய்து விட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மீதமுள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை சாதுக்கள் நல திட்டத்திற்கு வழங்கிட வேண்டும் என சக சாதுக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.
Next Story