சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க பிரதமரிடம் பரிந்துரை செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
புதுச்சேரி சட்டசபை  சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று 
நடைபெற்று வருகிறது . சந்திரயான் 2 விண்கலத்தை ஏவி சாதனை 
படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவையில் பாராட்டு 
தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி 
சந்திரயான்-2  விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க பிரதமரிடம் 
பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார். 

பின்னர்  பேசிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாலன், உயர்நீதிமன்ற 
உத்தரவுப்படி ஆளுநர் மற்றும் அதிகாரிகள் செயல்படவில்லை 
என்று குற்றம் சாட்டினார்.  இதற்கு பதிலளித்த முதலமைச்சர் 
நாராயணசாமி, ஆளுநர் ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருக்க 
வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.  தலைமை 
செயலரை இன்று அழைத்து அமைச்சரவை முடிவுகளை 
அரசாணையாக வெளியிட உத்தரவிட உள்ளதாக நாராயணசாமி
கூறினார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் சிவகொழுந்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்