மும்பை : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 14 பேர் உயிரிழந்தனர்
மும்பை : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் பலி
x
மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 14 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டோங்கிரி என்னும் இடத்தில், பழமையான கட்டிடங்களின் புனரமைப்பு பணியின் போது, 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த, போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்