மிரட்டல் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் மும்பை சென்றுள்ளனர் - கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்

கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் முன் 10 எம்எல்ஏக்களில் 8 எம்.எல்ஏக்கள் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதம் அளித்தனர்.
மிரட்டல் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் மும்பை சென்றுள்ளனர் - கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்
x
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை என்றார்.யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தனக்கில்லை என்ற சபாநாயகர், ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் என்று உறுதி அளித்துள்ளார். ராஜினாமா குறித்து விளக்கம் கேட்டு எம்.எல்.ஏக்களுக்கு சந்தர்ப்பம் அளித்தபோதும், அவர்கள் அதை ஏற்காமல்,நீதிமன்றத்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.மிரட்டல் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் மும்பை சென்றுள்ளதாக சக எம்எல்.ஏக்கள் கூறுவதாக தெரிவித்த சபாநாயகர், ராஜினாமா குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்