புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆளுநர் கிரண்பேடி மனு

புதுச்சேரி அரசில், துணை நிலை ஆளுநரின் அதிகாரம் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆளுநர் கிரண்பேடி மனு
x
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மத்திய அரசு மற்றும் கிரண்பேடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது,  ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், புதுச்சேரி அரசு கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்றும் அதேசமயம் நிதி சார்ந்த முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நாளை வழக்கு விசாரணை நடைபெறவதை ஒட்டி முதல்வர் நாராயணசாமி நேற்று  டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 7 ஆம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்