"தம் மீது புகார் இருந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகலாம்" - கிரண்பேடி
சட்டத்தை பின்பற்றியே நடப்பதாகவும், தம் மீது புகார் இருந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகலாம் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
சட்டத்தை பின்பற்றியே நடப்பதாகவும், தம் மீது புகார் இருந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகலாம் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். தமிழர்கள் வருத்தப்படும் வகையில் தாம் சமூகவலை தளத்தில் கருத்து பதிவிடவில்லை என்று மறுப்பு தெரிவித்த அவர், தமிழகத்திற்கும் தண்ணீர் கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது என்று குறிப்பிட்டார். புதுச்சேரி அரசாங்கம் கடந்த ஆண்டு பெய்த மழைநீரை சேர்த்து வைக்க எடுத்த நடவடிக்கையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
Next Story