மகாராஷ்டிராவில் கனமழை எதிரொலி : சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலி

மும்பையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இருவேறு இடங்களில் சுவர் இடிந்து 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கனமழை எதிரொலி : சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலி
x
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தென்மேற்கு பருவமழை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மும்பையின் மலாடா கிழக்கு பகுதியான பிம்பிரிடாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் 13 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல், புனேயில் உள்ள சிங்காத் கல்லூரி சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு புனேவில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியான நிலையில், தற்போது 18 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்