கேரளாவில் நகை வியாபாரியை தாக்கி 1.5 கிலோ தங்கம் கொள்ளை

கேரளாவில் நகை வியாபாரியை சரமாரியாக தாக்கி ஒன்றரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவில் நகை வியாபாரியை தாக்கி 1.5 கிலோ தங்கம் கொள்ளை
x
முக்கோலா பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி விஜு ரயில்நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இவரை மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வியாபாரியை சரமாரியாக தாக்கி ஒன்றரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றது. பாதிக்கப்பட்ட விஜு திருவனந்தபுரம் போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை, அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்