கேரள பெண் போலீஸை எரித்து கொன்ற ஆண் போலீஸ்... சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு

மாவேலிக்கரை பகுதியை சேர்ந்த சவுமியா வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபீஸராகப் பணிபுரிந்தார்.
கேரள பெண் போலீஸை எரித்து கொன்ற ஆண் போலீஸ்... சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு
x
மாவேலிக்கரை பகுதியை சேர்ந்த சவுமியா வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபீஸராகப் பணிபுரிந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான சவுமியாவை, திருமணம் செய்து கொள்ள போக்குவரத்து காவலர் அஜாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு சவுமியா மறுத்தால், இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அஜாஸ், கடந்த 15ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய சவுமியாவை கத்தியால் குத்தியதோடு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றார். இந்த சம்பவத்தின் போது 50 சதவீதம் தீக்காயம் அடைந்த அஜாஸ், ஆலப்புழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காவலர் அஜாஸ் உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்