நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி
கடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி அருகே உள்ள செட்டிகட்டளை கிராமத்தில் வசித்து வரும் ராமலிங்கம் கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு நிஃபா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வசித்து வந்த கிராமத்தில் மருத்துவ குழுவினர் சோதனை நடத்தி வருவதால் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
Next Story