ஆரோவில் அருகே கஞ்சா மதுபோதையில் நடன நிகழ்ச்சி : 15 பேர் கைது
ஆரோவில் காட்டுப் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் சிலர், மதுபோதையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆரோவில் காட்டுப் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் சிலர், மதுபோதையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற, போலீசார், வெளிநாட்டவர், கல்லூரி மாணவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், 15 பேரை கைது செய்தனர். மேலும் விழாவில் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கஞ்சா, மது வகைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரோவில் பகுதியில் கஞ்சா மற்றும் மது போதை கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story