மீண்டும் ஆய்வு பணியை துவக்கினார் கிரண்பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் ஆய்வு பணிகளை துவக்கியுள்ளார்.
மீண்டும் ஆய்வு பணியை துவக்கினார் கிரண்பேடி
x
மக்களவை தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, கிரண்பேடியின் அதிரடி ஆட்டம் மீண்டும் துவங்கி உள்ளது. முதல் நாளான இன்று சைக்கிளில் பயணம் செய்து கனகன் ஏரியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். பின்னர், புதுச்சேரி அரசு அதிகாரிகளுடன் கிரண்பேடி ஆலோசனை நடத்தினார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் அதிரடி ஆட்டத்தை துவக்கி இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்