பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் விரிவாக்கம்
தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம், மாநில போலீசாருக்கும் விரிவுபடுத்தி, பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம், மாநில போலீசாருக்கும் விரிவுபடுத்தி, பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மாதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ஆகவும், மாணவிகளுக்கு 2 ஆயிரத்து 250லிருந்து, 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். தீவிரவாதிகள் மற்றும் நக்சல் தாக்குதல்களில் உயிரிழக்கும் மாநில காவல்துறையினரின் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 500 மாநில காவல்துறையினர் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். பிரதமராக 2 முறை பொறுப்பேற்ற பின், மோடி எடுத்த முதல் முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story