வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு : மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு : மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
x
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு  மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர், காவல் துறை தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையை தடுக்க வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாமல் கவனம் செலுத்துமாறும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறும் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில டிஜிபி-க்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்