ஆஞ்சநேய கோயிலில் 7.5 அடி உயர சிலை பிரதிஷ்டை : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேய கோயிலில் புதிதாக வேங்கடாசலபதிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேய கோயிலில் 7.5 அடி உயர சிலை பிரதிஷ்டை : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேய கோயிலில் புதிதாக வேங்கடாசலபதிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக திருப்பதி வேங்கடாசலபதி சுவாமியை போலவே திருமலையில் உள்ள கல்லை கொண்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழரை அடி உயரத்திலும், 2 டன் எடையிலும் புதிய வேங்கடாசலபதி சிலை செய்யப்பட்டது. கடந்த மார்ச் 22ஆம் தேதி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, 48 நாட்கள் தான்யவாசம், ஜலாதிவாசம் செய்யப்பட்ட நிலையில், இன்று வேங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்